இறுதி பருவத் தேர்வுகளை செப்.30க்குள் நடத்தி முடிக்க வேண்டும்... UGC உத்தரவு


இறுதிப் பருவத் தேர்வுகளை  இம்மாதம் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி  கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (UGC) உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் 2019-2020 கல்வியாண்டுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. அண்மையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  தேர்வுகளை கட்டாயம் நடத்த தீர்ப்பளித்தது. 

இந்நிலையில்,  30-ம் தேதிக்குள் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.

முதலாம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் சான்றிதழ் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை 30ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION